ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் "வயநாடு தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் நடத்தப்பட மாட்டாது" - தலைமைத் தேர்தல் ஆணையம்

0 1405

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் காலியான கேரள மாநிலம் வயநாடு  தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மக்களவைத் தொகுதிக்கும், உத்தர பிரதேசம், ஒடிசா, மேகாலயா மாநிலங்களில் காலியாக இருந்த 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மே 10ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும், மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

அப்போது அவரிடம், வயநாடு தொகுதி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அங்கு அவசரப்பட்டு இடைத்தேர்தல் நடத்த விரும்பவில்லை என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments